
75வது சுதந்திர கொண்டாட்டம் : 12 மொழியில் பாடல் உருவாக்கும் ஜி.வி.பிரகாஷ்
இந்த ஆல்பத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதனை சத்யம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.ராஜசேகர் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சக்ரா அறக்கட்டளை சார்பில் சக்ரா ராஜசேகர் தயாரிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பாடல் தமிழில் தொடங்கி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் தனித்தனியாக உருவாகிறது.
ஒவ்வொரு மொழி பாடலிலும் அந்த மொழியில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை இடம் பெறும். தமிழில் வ.உ.சிதரம்பரனாரின் வாழ்க்கை இடம்பெறுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதுகிறார்கள். தமிழில் அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார்.
இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது. என்றார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!