
சிவகுமாரின் சபதம் 3வது பாடல் வெளியீடு
முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். நாயகி (மாதுரி ) நாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைந்துருகி பாடுவதாக வரும் பாடல் இது.
படத்திற்கு அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!