
விஜய், அஜித் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா ?
அரசு அறிவித்துள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட்டே படப்பிடிப்புகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் பாதுகாப்பாக இருக்க பல நடிகர்கள், நடிகைகள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.
தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்த பிறகுதான் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து விதமான பணியார்களையும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே படப்பிடிப்புகளுக்கு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இன்று ஆரம்பமாகியுள்ள விஜய்யின் "பீஸ்ட்" படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், படத்தின் நாயகன் விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் வந்தன. அப்படி அவர் தடுப்பூசி போட்டிருந்தால் அதை வெளியில் அறிவித்தால், அவரது ரசிகர்களும் எந்தத் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்வார்களே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
அஜித்தும் விரைவில் "வலிமை" படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் சொல்கிறார்கள். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், யோகி பாபு, சூரி உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
விஜய்யும், அஜித்தும் அவர்களது ரசிகர்களின் நலன் கருதி தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தகவலை வெளியிடலாமே ?.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!