
ஞானவேல்ராஜா மீதான அவதூறு வழக்கு ரத்து
இதையடுத்து சினிமா பைனான்சியர் போத்ரா, தன்னிடம் கடன் வாங்குபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என்று பத்திரிக்கை ஒன்றில் பேட்டி அளித்திருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இதையடுத்து அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் பைனான்சியர் போத்ரா.
இந்நிலையில் போத்ரா இறந்து விட்ட நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!