
ஷங்கரை தொடர்ந்து லிங்குசாமிக்கும் சிக்கல்
இந்த நேரத்தில் தங்களிடம் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு ஒரு படத்தை இயக்கி தந்த பிறகுதான் வேறு படத்தை லிங்குசாமி இயக்க வேண்டும் என்று ஸ்டுடியோ கிரீன் ஞான வேல்ராஜா சேம்பரில் புகார் அளித்துள்ளார்.
அதாவது, கமல் நடித்த உத்தமவில்லன் படத்தை எடுத்தபோது லிங்குசாமிக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது அவருக்கு பண உதவி செய்தாராம் ஞானவேல்ராஜா. ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் அவரிடத்தில் வாங்கிய பணத்தை லிங்குசாமியினால் திருப்பி தர முடியவில்லையாம்.
அதனால் தன்னிடம் வாங்கிய பணத்திற்கு தனது நிறுவனத்திற்கு ஒருபடம் இயக்கித் தருமாறு அப்போது கூறியிருக்கிறார் ஞானவேல்ராஜா. ஆனபோதிலும் லிங்குசாமி தெலுங்கு படவேலைகளை தொடங்கியதால் தான் அவர் மீது தற்போது புகார் அளித்துள்ளாராம் ஞானவேல்ராஜா. அதேசமயம் தெலுங்கு பிலிம் சேம்பரில் ஞானவேல்ராஜா உறுப்பினராக இல்லை என்பதால், அவர் கொடுத்த புகாரின் பேரில் லிங்குசாமிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!