
கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
மருத்துவரான ஐஸ்வர்யா ஷங்கர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித். 29 வயதான ரோகித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம் கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்று விளையாடியவர். அதன்பிறகு தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்கு கேப்டனாகவும் மாறினார்.
நடப்பு சீசனில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மும்பைக்கு எதிரானப் போட்டியில் புதுச்சேரி அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று அதிகபட்ச ஸ்கோராக 63 ரன்கள் அடித்திருந்தார். ஐஸ்வர்யா - ரோகித் திருமணம் வரும் 27ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் எளிமையாக நடக்க இருக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!