
தனது இறுதி சடங்கு எப்படி நடக்க வேண்டும்?: மகனிடம் சொன்ன ஜி.ஆர்.ரங்கராஜன்
அப்பாவை நேசித்தவர்கள் இத்தனை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறைசாற்றுகிறது. என் இழப்பைத் தங்கள் வீட்டு இழப்பாகக் கருதி, அப்பா இறந்த செய்தியைப் பல ஊடகங்களில் கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி.
திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்றுக் கொண்ட ஒரு விஷயம். அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாமே அழகாக யோசித்து, நேர்த்தியாகத் திட்டமிடுவது அப்பாவின் பலம். படப்பிடிப்பை அப்பா, திட்டமிடும் விதத்தை நேரில் பார்த்துப் பிரமித்த எனக்கு, அவர் தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறியபொழுது, மகனாக நொறுங்கிப் போனேன்.
எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி நடத்த வேண்டும், இன்னும் என்னென்னமோ சொன்னார். எனக்குத்தான் கேட்க மனதளவில் தைரியமில்லை. அவர் சொன்னது நடக்கவில்லை. அவர் விரும்பியது நடக்கவில்லை. பாழாய்ப் போன கொரோனா, உயிர்களை மட்டும் பறிக்கவில்லை, மனிதர்களின் கடைசி நிமிடங்களையும் கொன்று விடுகிறது.
தந்தையுடன் பயணித்தவர்கள், பணியாற்றியவர்கள், பழகியவர்கள் யாரையும் அவரது கடைசி முகத்தை பார்க்க முடியாமல் செய்து விட்டது கொரோனா. நேரில் வர முடியாவிட்டாலும், அப்பாவைக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போன அவர்கள் வலியை உணர்கிறேன். இன்பத்தில் ஒன்று கூடவும், துன்பத்தில் தோள் கொடுக்கவாவது கொரோனா ஒழிய வேண்டும். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!