
நடிகை ஆன எழுத்தாளர் மனைவி
இயக்குனர் பாலா அவரை நான் கடவுள் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக நடித்து பேசும் வசனங்கள் மிகவும் பிரபலம். அதன்பிறகும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது மனைவியும் நடிகை ஆகியுள்ளார்.
எழுத்தாளர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கி உள்ள இன்ஷா அல்லாஹ் என்ற படத்தில் விக்ரமாதித்யன் மனைவியாக அவரது நிஜ மனைவி பகவதி அம்மாள் நடித்துள்ளார். இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை சொல்லும் இந்தப் படத்தில் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதை ஒன்று இடம் பெறுகிறது. இந்த கதை முதிய இஸ்லாமிய தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியது. இந்த கதையில் விக்ரமாதித்யனும் அவரது மனைவி பகவதி அம்மாளும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!