
ஹன்சிகா படத்துக்கு தடைகேட்டு இயக்குனர் வழக்கு
கடந்த ஆண்டே படத்தின் பணிகள் முடிந்து விட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது 2வது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி அந்தப் படத்தின் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு இந்தப் படத்தை இயக்குவதற்காக 24 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது ஆனால் இதுவரையிலும் 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளது, 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தர வேண்டியிருக்கிறது.
மேலும், இந்தப் படத்தின் ஒரிஜினல் கதாசிரியரான எனக்கே தெரியாமல் கதைகளில் மாற்றம் செய்து உதவி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள். இதனால் எனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதுவரையிலும் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மனுவுக்கு பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர், உதவி இயக்குநர், படத் தொகுப்பாளர் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!