
கணவர் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதி வழங்கிய சவுந்தர்யா ரஜினி
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, தன் கணவர் விசாகன் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார். இந்த சந்திப்பின் போது சவுந்தர்யா, விசாகன் மற்றும் வணங்காமுடி (சவுந்தர்யா மாமனார்) ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அபெக்ஸ் பார்மெசி என்ற நிறுவனத்தை விசாகன் நடத்தி வருகிறார். தங்கள் நிறுவனத்தின் சார்பாக இந்த நிதியை வழங்கி உள்ளனர்.
|
முன்னதாக சவுந்தர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார் என்றதும், அது நடிகர் ரஜினிகாந்த் சார்பாக வழங்கப்பட்டது என தவறாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!