
பெரிய ஹீரோக்கள் நடிக்க தயங்கிய கேரக்டரில் கதிரவன்
இந்த படம் பற்றி இயக்குனர் ஷரவண சுப்பையா கூறியிருப்பதாவது: தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருந்ததால் இயக்கம் பற்றி யோசிக்கவில்லை. ஆனாலும் என் கையில் நிறைய கதைகள் இருந்தது. ஒன்பதில் இருந்து பத்து வரை படத்தில் நடித்தபோது அந்த படத்தில் நடித்த கதிவரன் எனக்கு அறிமுகனார். அவர் பல படங்களில் நடித்தும், தயாரித்தும் நிறைய பணத்தை இழந்திருந்தார். இழந்த பணத்தை மீட்கவும், ஒரு ஹீரோவாக ஜெயிக்கவும் எனக்கு ஒரு படம் பண்ணித் தாருங்கள் என்று கேட்டார்.
என்னிடம் இருந்த கதை ஒன்றை அவரிடம் கூறி, இதில் வரும் கடைசி 15 நிமிட கிளைமாக்சுக்கு உயிரை பணயம் வைத்து நடிக்க முடியுமா என்று கேட்டேன். காரணம் இதே கதையை பல பெரிய ஹீரோக்களிடம் சொன்னேன். அவர்களும் கதை நன்றாக இருக்கிறது. கிளைமாக்சை மாற்றுங்கள் என்றார்கள். நான் மாற்ற சம்மதிக்காததால் அவர்களும் நடிக்க மறுத்து விட்டார்கள். கதிரவன் ஒப்புக்கொண்டு நடித்தார். இதற்காக அவர் ஒருவருடம் வரை பயிற்சி எடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டார். படம் வெளிவரும்போது அந்த கிளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!