
மருத்துவமனை செட்டை தானம் செய்த ராதே ஷ்யாம் படக்குழு
இந்தநிலையில் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ராதே ஷ்யாம் படக்குழுவினர் படத்திற்காக பிரமாண்டமான மருத்துவமனை செட் ஒன்றை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு படுக்கை வசதி பற்றாக்குறை நிலவுவதாக கூறியதை அடுத்து, படப்பிடிப்புக்காக உருவாக்கி வைத்திருந்த 50க்கும் குறையாத படுக்கைகள், ஸ்டாண்டுகள், ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்தையும் கொடுத்து உதவியுள்ளது. படக்குழுவின் இந்த பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!