
சென்னையில் படப்பிடிப்பைத் தொடருமா விஜய் 65 குழு?
அடுத்த சில நாட்களில் அங்கு படப்பிடிப்பு முடியும் எனத் தெரிகிறது. அதற்கடுத்து சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பை இங்கு தொடர்ந்து நடத்துவார்களா என்பதும் சந்தேகம்தான். மேலும், வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வருபவர்கள் மீது சுகாதாரத் துறை தனி கவனம் செலுத்தி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இங்கு விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற வாய்ப்பில்லை என்றும், சில வார இடைவெளிக்குப் பிறகுதான் அவர்கள் படப்பிடிப்பைத் தொடர முடியும் என்றும் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!