
விவேக்கின் கிரீன் கலாம் அமைப்புக்கு நான் போட்டியில்லை: தாமு விளக்கம்
இதுறித்து தாமு கூறியிருப்பதாவது: விவேக்கின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விவேக் பத்தாண்டுகளுக்கு மேலாக செய்து வந்த மரம் நடும் பணியை பலரும் செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதுவே விவேக்கின் வெற்றிதான்.
விவேக் பல்லாண்டுகளாக எனக்கு நண்பர். அவர் தொடங்கியிருக்கும் அமைப்புக்கு எதிராக நான் கலாம் விவேக் என்கிற பெயரில் அமைப்பு தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நான் அப்படி சொல்லவில்லை. நான் போகும் இடங்களில் நடும் மரக்கன்றுகளுக்கு கலாம் விவேக் என்று பெயர் வைக்கப் போவதாகத்தான் சொன்னேன். அமைப்பு தொடங்கப்போவதாக சொல்லவில்லை.
விவேக் தொடங்கியிருக்கும் பசுமை கலாம் அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் என்னை அழைத்தால் நான் கலந்து கொள்வேன். எனது நண்பனின் அமைப்புக்கு ஆதரவாக இருப்பேன். என்கிறார் தாமு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!