நோட்டா, பட்டாஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பஞ்சாப் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. தற்போது எப்-3 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் மெஹ்ரீனுக்கும், பவ்யா பிஷ்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. மணமகன் பவ்யா, அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் ஆவார். மெஹ்ரீனும், பவ்யா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து நிச்சயமாகி உள்ளது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!