
சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன்
இப்படத்தில் நடிப்பதற்காக தேவ் மோகன் கடந்த மூன்று மாதங்களாக குதிரையேற்ற பயிற்சி, வாள்வீச்சுப் பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டாராம். தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளவும் பயிற்சி எடுத்துள்ளாராம்.
“துஷ்யந்தன் அவருடைய அழகான தோற்றத்தால் அறியப்படுபவர். அவர் எங்கு சென்றாலும் அவருடைய அழகில் பெண்கள் மயங்குவார்கள். நம்மில் யாருக்கும் துஷ்யந்தன் எப்படி இருப்பார் என்று தெரியாது. இதற்கு முன்பு மக்களுக்குத் தெரிந்த நடிகராகவோ, ஒரு குறிப்பிட்ட இமேஜ் உடையவராகவோ இருக்கும் ஒருவரைத் தேர்வு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். கடைசியாகத்தான் தேவ் மோகனைத் தேர்வு செய்தோம்,” என்கிறார் இயக்குனர் குணசேகர்.
மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள தேவ் மோகன் "சகுந்தலம்" மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!