கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். கடைசியாக படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்திற்கு பின் படப்பிடிப்பு துவங்கவில்லை. மேலும் கமல் தற்போது அரசியலில் பிஸியாகி விட்டதால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இருப்பினும் 60 சதவீதம் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் மீதி படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் அடுத்தப்பட வேலையில் ஷங்கர் இறங்க உள்ளார். இதற்கிடையே ராம்சரண் நடிப்பில் தமிழ்-தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி விட்டார் ஷங்கர். இந்தப்படம் முழுமையாக முடிந்த பின்னர் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஒரு படத்தை ஷங்கர் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!