
எனக்கு கொரோனா பாசிடிவா? : பதறும் நடிகை
லண்டனில் வசிக்கும் நதாலியா சியாம் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்கள் முன்புவரை லண்டனில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தற்போது இந்தியா திரும்பியுள்ளார் லேனா. சொல்லப்போனால் பிரிட்டனில் கொரோனாவின் இரண்டவது அலை உருவானதாக கூறி லாக்டவுன் அறிவிக்கப்பட்ட சமயத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய லேனா, பெங்களூருவில் கொரோனா பரிசோதனைக்காக தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் லேனாவுக்கு கொரோனா பாசிடிவ் என செய்திகளை வெளியாகி உள்ளன. இதனை கண்டு பதறிப்போன லேனா, “இது வழக்கமாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் சோதனை தான். லண்டனில் பிளைட் ஏறும் முன்பே கொரோனா நெகடிவ் என்கிற ரிப்போர்ட்டுடன் தான் கிளம்பினேன். தற்போது இங்கே ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். அதற்குள் சிலர் இப்படி தவறான செய்திகளை பரப்பிவிட்டார்கள்.. இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம்... மேலும் பரப்பவும் வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் லேனா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!