
50 சதவீதம் என்றால், ஒன்லி மாஸ்டர், நோ ஈஸ்வரன் ?
இதனிடையே, மாநில அரசு தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினால் "மாஸ்டர்" படத்தை மட்டுமே திரையிடும் முடிவில் தியேட்டர்காரர்கள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட "ஈஸ்வரன்" படத்தை இரண்டு வாரங்களுக்குப் பிறகு திரையிடலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.
50 சதவீத இருக்கைகளில் இரண்டு படங்கள் போட்டியிடுவது சரியல்ல. முதலில் பட வெளியீட்டை அறிவித்த "மாஸ்டர்" படத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும், அப்படம் வெளிவரும்பட்சத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வருவார்கள் என்றும் தியேட்டர்காரர்கள் கருதுகிறார்களாம்.
இந்த யோசனைக்கு "ஈஸ்வரன்" தயாரிப்பாளர் முன்வருவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. அவரும் ஜனவரி 14 அன்று படத்தை வெளியிட கடந்த ஒரு வாரமாகவே விளம்பரப்படுத்தி வருகிறார். இப்போது படம் வரவில்லை என்றால் விளம்பரம் செய்த அந்த நஷ்டத்தை யார் ஏற்றுக் கொள்வது என்ற கேள்வி வரும்.
சூழ்நிலைக்கேற்ப தியேட்டர் சங்கத்தினர் முடிவெடுத்துக் கொள்ள அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல். இதனால், "மாஸ்டர்" படம் ஜனவரி 13 அன்று வெளிவருவது உறுதி என்றே சொல்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!