
சூர்யா 47வது படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகிறது
ஜீத்து மாதவன் கூறுகையில், சிங்கம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சூர்யாவுக்காக திரைக்கதையை மிக நேர்த்தியாக உருவாக்கி உள்ளேன். கண்டிப்பாக சூர்யாவுக்கு இன்னொரு சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று கூறி இருக்கும் அவர், இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் போஸ்டர் குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூடிய சீக்கிரம் அது குறித்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
சூர்யா 47 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க, நெஸ்லின் கபூர் கீ ரோலில் நடிக்கிறார். சூர்யா - ஜோதிகாவின் ழகரம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!