
பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம்
"பாண்டித்தேவன்" படம் அங்கு எடுக்கப்பட்டபோது ஒரு சாலை வளைவில் ஒரு விபத்து ஏற்பட்டு நிறைய பேர் காயம் அடைந்தனர். உள்ளூர் மக்களே அவர்களை காப்பாற்றி சிகிச்சை அளித்தனர். இது அப்போது பரவலாக பேசப்பட்டது. அன்று முதல் விபத்து நடந்த இடம் "பாண்டித்தேவன் வளைவு" என்று இப்போதும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.
"பாண்டித்தேவன்" படத்தில் எம்.ஜி.சக்கரபாணி, ராஜசுலோச்சனா, டி.கே.பாலச்சந்திரன், பி.எஸ்.சரோஜா, அசோகன், சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்திரபாவுவின் புகழ்பெற்ற பாடலான "சொல்லுறத சொல்லிபுட்டேன்" என்ற பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!