
பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா
கதைப்படி சத்யராஜ் ஒரு பிக்பாக்கெட் திருடன். நாயகி ராதா தன் தங்கை திருமணத்திற்காக வங்கியில் திருடுவார். அந்த பணத்தை சத்யராஜ் திருடிக் கொண்டு வந்து விடுவார். இதை கேட்க ராதா போவார். பின்னர் இருவருமே திருட்டால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து திருட்டு தொழிலை விட்டுவிட்டு இருவருமே நேர்மையானவர்களாக மாறிவிடுவார்கள். ராதா, சத்யராஜை போலீஸ் எக்சாம் எழுத வைத்து போலீசாக்கி விடுவார். இந்த கதைகளுக்கு இடையே சிவப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழிலாளியாக இருந்த சிலக் ஸ்மிதா அதை விட்டு விட்டு போலீஸ் எக்சாம் எழுதி அவரும் போலீசாகி விடுவார். அதற்கு சத்யராஜ் உதவி செய்வார். இதனால் சத்யராஜை ஒரு தலையாக சில்க் ஸ்மிதா காதலிப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் சத்யராஜை கைது செய்ய வேண்டிய நிலையம் சுமிதாவிற்கு வரும், இப்படி போகும் படத்தின் கதை.
இந்த படத்தை ஜி.எம்.குமார் இயக்கினார், கே.பி.பிலிம்ஸ் பாலு தயாரித்தார். வேலு பிரபாகரன் ஒளிப்பதிவு செய்தார், இளையராஜா இசை அமைத்தார். சென்சார் பிரச்னையயில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு பிறகு சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!