
பிரதீப் ரங்கநாதனை நோக்கி நகரும் வெங்கட் பிரபு
ஏப் 20, 20261
Advertisement
கோட் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார் வெங்கட்பிரபு. இதற்கான பணிகள் ஓராண்டாக நடந்து வந்தது. அமெரிக்காவில் வைத்து சிவகார்த்திகேயனுக்கு கிராபிக்ஸ் டெஸ்ட் எல்லாம் நடந்தது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில் தற்போது இப்படம் டேக் ஆப் ஆகவில்லை. சிவகார்த்திகேயனின் கால்ஷீட், பட்ஜெட் உள்ளிட்ட பிரச்னைகளால் இப்படம் டிராப் என்று கூட செய்திகள் வருகின்றன. ஆனால் இதை படக்குழு யாரும் உறுதி செய்யவில்லை. வெங்கட்பிரபு வேறு படத்தை இயக்க போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக அவர், நடிகர் பிரதீப் ரங்கநாதனை அணுகி பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்வெங்"கட்" பிரதீப் இல்லைனா மார்க்"கட்" போய்விடும்