
அண்ணன், தம்பியை இயக்கும் வினோத்
இதையடுத்து நடிகர் சூர்யாவிற்கு கதை ஒன்றைக் கூறியுள்ளார் வினோத். இது சூர்யாவின் 48வது படமாக உருவாக உள்ளது. ஆனால் சூர்யா கைவசம் அடுத்தடுத்து இரு படங்கள் உள்ளதால் இந்த படம் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் இன்னொரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் வினோத். அதன்படி ஏற்கனவே கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் மீண்டும் அவரை வைத்தே ஒரு படத்தை இயக்க போகிறாராம். இதை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனேகமாக இது தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!