
பிளாஷ்பேக் : சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போன டி.எஸ்.பாலைய்யாவின் வாரிசு
பாலையாவின் மகள் பெயர் மனோசித்ரா. "மாதுளை முத்துக்கள்" படத்தின் மூலம் தமிழிலும், "மழநிலவு" என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். ஸ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” என்ற படம் அவரை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து மலையாளத்தில் ஒரு பைங்கிளிக் கதா, ஈ வழி மாத்ரம், திமிங்கிலம், ஸ்வந்தம் சாரிகா, உமா நிலையம், குருஜி ஒரு வாக்கு போன்ற பல படங்களிலும், தெலுங்கில் ஸ்ரீ வாரி ஷோபனம், டெரர், மாவாரி கோலா போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.
சரியான வாய்ப்புகள் இன்றி சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் "அண்ணனுக்கு ஜே" என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரியானார். தொடர்ந்து "ஜெயம்" படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்திருக்கிறார். பின்னர் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!