
ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி
அந்த வீடியோவில், ராம் சரண் கட்டுமஸ்தான பயில்வான் தோற்றத்தில் குஸ்தி வீரராக தோன்றியுள்ளார். அதன் பின்னணியில் ஆட்டம் தான் என் திமிரு என்ற வசனம் ஒலிக்கிறது. இதன் மூலம் இந்த படம் அதிரடியான குஸ்தி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
ராம்சரணுக்கு 41வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் அவரது தந்தையான நடிகர் சிரஞ்சீவி, சிறு வயதில் ராம் சரணுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதோடு சமீபத்தில் தெலுங்கானா அரசு என்டிஆர் விருதும் அதனுடன் 10 லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கி தன்னை கவுரவப்படுத்திய நிலையில், அந்த தொகையை தனது நீண்டகால சமூக நலப்பணியுடன் ஒத்து போகும் 5 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார் சிரஞ்சீவி.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!