
உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா?
மேலும், இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான "டிரோல்கள்" வந்தன. அது குறித்து படத்தின் இயக்குனர் ஹரிஷ் சங்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “ட்ரோலர்கள் எதையும் ட்ரோல் செய்ய முழு சுதந்திரம் உடையவர்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். உதாரணமாக, "காட்சி சரியாக எழுதப்படவில்லை" அல்லது "இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம்", "முதல் பாதி கொஞ்சம் மெதுவாக இருந்தது" போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன்.
ட்ரோல் விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன், ஏனெனில் அவர்களின் அடையாளமோ, இருப்பிடமோ தெரியாது. அவர்களே தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மிகவும் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.
நான் ஏதாவது சொன்னால், அதற்கான பொறுப்பையும் பொறுப்புணர்வையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இருளில் கற்களை எறியும் மக்களுக்கு அது ஒன்றல்ல. நான் ட்ரோல் செய்யப்பட்ட விதத்தில், எக்ஸ் தளத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே விட்டிருப்பேன். ட்ரோலர்கள் அல்லது வசூலைப் பற்றி பேசுபவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
நான் சினிமாவில் வேலை செய்ய வேண்டும் என்று என் பெற்றோரிடம் சொன்னபோது முதலில் என்னை ட்ரோல் செய்தவர்கள் என் பெற்றோர்தான். "நீ இயக்குநராக ஆக முடியும் என்று எப்படி நினைக்கிறாய் ?" என்று யாராவது சொல்வது புதிதல்ல. அவர்கள் அவதூறான மொழியைப் பயன்படுத்தினால் அல்லது எல்லையைத் தாண்டினால் நான் பிளாக் செய்கிறேன் அல்லது புகார் செய்கிறேன். இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட அனைத்து சவால்களையும் தாண்டியதில் நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன்,” என்று பேசியுள்ளார்.
இப்படம் சுமார் 150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான ஒரு படம் என்கிறார்கள். ஆனால் வசூல் இதுவரையில் 100 கோடியை நெருங்கவில்லை. பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி சுமார் 75 கோடியை நெருங்கியிருக்கும் என்கிறார்கள். படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இதற்கு மேல் படம் ஓட வாய்ப்பில்லை. எனவே, 100 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படலாம் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!