
தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த்
இதுபற்றி மான்யா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், "என பேட்டியை வைத்து தனுஷ் சாரை பற்றி பல சேனல்கள் தவறான தகவல்களைப் பரப்புவதை நான் கவனித்தேன். என்னை தொடர்பு கொண்ட நபர், ஸ்ரேயாஸ் என்று கூறிக்கொண்டு இருக்கும் ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாக குறிப்பிட்ட அசல் வீடியோவைப் பாருங்கள். தனுஷின் மேலாளர் என்று திட்டவட்டமாக குறிப்பிடவில்லை அதைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காக தனுஷ் சாரின் குழுவுடன் அந்த எண்ணைப் பகிர்ந்து கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளேன். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!