
கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி
இந்தப் படத்திற்காக சந்திர பிரகாஷ் ஜெயினிடம், இயக்குனர் பிரபு சாலமன் 1.5 கோடி கடன் வாங்கிய நிலையில், அதை வட்டியுடன் சேர்த்து 2.5 கோடியாக அவருக்கு கொடுக்காததால் இப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கும்கி 2 படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார். இதை நீக்க கோரி பிரபு சாலமன் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என "கும்கி 2" படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கை வைத்தது. இதை ஏற்ற நீதிமன்றம் "கும்கி 2" படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!