
துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்!
"லக்கி பாஸ்கர்" படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு, அதன் பிறகு மலையாளத்தில் அவர் தயாரித்த "லோகா சாப்டர் ஒன்" படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் தற்போது அவர் தயாரித்து நடித்திருக்கும் "காந்தா" என்ற படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார் துல்கர் சல்மான். அந்த நிறுவனத்தின் பிரியாணி அரிசியை சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனம் திருமண நிகழ்ச்சியில் சமைத்துள்ளார்கள். ஆனால் அந்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தற்போது அந்த பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு மட்டுமின்றி அதில் விளம்பர தூதராக இருக்கும் நடிகர் துல்கர் சல்மான் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!