
படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம்
படம் குறித்து அவர் கூறியதாவது: நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் இயக்குனராவற்கே சினிமாவிற்கு வந்தேன். அதற்காகவே வீட்டில் பிடிவாதமாக விஸ்காம் படிக்க வேண்டும் என அடம்பிடித்து படித்து முடித்தேன். வாழ்நாளில் ஒரு முழு நீளப் படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். அந்தக் கனவை "மயிலா" நிறைவேற்றியிருக்கிறாள்.
இந்தப் படத்துக்கு லைவ் டப்பிங். அதனால் நன்கு தமிழ்ப் பேசும், குரல்வளம் உள்ள ஒருவர் வேண்டும் என்பதால் நடிகை மெலோடி டார்கஸ் தேர்வானார். இந்தப் படத்தில் என் மகள் சுடர்கொடியை நடிக்க வைத்துள்ளேன். அதில் என் சுயநலமும் இருக்கிறது.
என் மகள் என்பதால், அவளிடம் எப்படி வேண்டுமோ, எப்போது வேண்டுமோ, எத்தனை முறை வேண்டுமோ, அப்படி நடிக்க வைத்துக் கொள்ளலாம். அதோடு ஒரு நடிகையாக இந்த கதைக்கு என் மகள் சரியாக இருப்பாள் என்று கருதியதால் அவளை நடிக்க வைத்தேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!