
ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன் பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன் வசனத்தால் அசந்து போன கமல்
அதற்காக இந்த படத்தில் சில காட்சிகளை கூடுதலாக சேர்த்து ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக இப்படத்தில் வரும் குழந்தைகள் கதாபாத்திரத்திற்கான வாய்ஸ் ஓவர்க்காக மதுரையை சேர்ந்த சிறுவர்கள் தேவ ஹர்சினி, முத்துமணி, கனிஷ்பா, வர்ஷிபா, சிவஸ்ரீ ஆகிய ஐவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சென்னைக்கு அழைத்து சென்று நடிகர் கமல் முன்னிலையில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த சிறுவர்களை சந்தித்த கமல், அவர்களுடன் உரையாடினார். அதில் சுட்டி பையன் பேசிய கட்டபொம்மன் படத்தின் வசனத்தை கண்டு அசந்து போனார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!