
மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி
குடும்ப கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம் பெறுகின்றனராம். முதல் நாயகியாக தபு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியானது. தொடர்ந்து இப்போது மற்றொரு நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நாகர்ஜூனா, அனுஷ்கா இருவரும் சூப்பர், டான், ரகடா, டமாருக்கா போன்ற படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சில படங்களில் சிறப்பு ரோலில் நாகார்ஜூனாவின் படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!