
இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு
அதன்படி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 13) ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்" இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரன் போன்ற இளையராஜா குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ராஜாவின் இசை மழை... முதல்வர் தேர்வு செய்த பாடல்கள்
இளையராஜாவின் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு பாராட்டு விழா துவங்கியது. ‛அமுதே தமிழே..." என்ற பாடல் முதலில் பாடப்பட்டது. இந்த பாடலை இளையராஜாவும் அவரது குழுவினரும் பாடினர். தொடர்ந்து ‛‛ராக்கம்மா கைய தட்டு..., செந்தூரப்பூவே..., அந்தி மழை பொழிகிறது..., சின்னத்தாய் அவள்..., உன்ன நினைச்சு..., ராஜா கைய வச்சா..., காதலின் தீபம் ஒன்று..., மாறுகோ மாறுகோ..."" உள்ளிட்ட பல பாடல்கள் மேடையில் நேரலையில் பாடி, இசையமைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் இளையராஜாவின் இன்னிசை மழையை ரசித்தனர். முன்னதாக இந்த மேடையில் பாடிய பாடல்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்ததாக விழாவில் கமல் தெரிவித்தார்.
சிம்பொனி இசை
இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசையும் இசைக்கப்பட்டது. இது ரசிகர்களை மேலும் இன்னிசை மழையில் நனையவிட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!