
கங்குவா கதாநாயகி வீட்டில் துப்பாக்கிச் சூடு : இது ‛டிரைலர் என எச்சரிக்கை
இந்து சாமியார்கள் பிரேமானந்த் மகாராஜ், அனிருத்தாச்சார்யா மகாராஜ் ஆகியோர் குறித்து திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி தெரிவித்த கருத்துக்களால் இது நிகழ்ந்ததாகத் தெரிகிறது. தாங்கள்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என ரோகித் கோல்டி பிரார் குரூப் அதற்கு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இது குறித்து அவர்கள் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், திஷா பதானி, அவரது சகோதரி சனாதன தர்மத்தை இழிவுபடுத்த முயன்றார். நமது தெய்வங்களின் அவமானத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை அவர் அல்லது அவரது வீட்டில் உள்ள ஒருவரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். இந்த செய்தி அவருக்கு மட்டுமல்ல திரைப்படத் துறையின் அனைத்து கலைஞர்களுக்கும் தான். எதிர்காலத்தில் இப்படி நம் மதம் பற்றி அவமானமாகப் பேசினால் அதன் விளைவுகளுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு பதானி இந்திய ராணுவத்தில் 10 வருடங்கள் பணியாற்றியவர். மேஜர் ஆக இருந்தவர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் உடல்நலன் சார்ந்த கோச் ஆகவும் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
லிவ் இன் உறவு பற்றி அனிருத்தாச்சார்யா தெரிவித்த கருத்துக்கு எதிராக வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!