
நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது
கன்னட திரை உலகத்திலிருந்து தர்ஷனின் இந்த குற்ற செயலுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்து வருபவர் நடிகை ரம்யா. தமிழில் பொல்லாதவன், குத்து, ஏழுமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் முன்னாள் எம்.பியும் கூட. இந்த நிலையில் தர்ஷனின் ரசிகர்கள் தங்களது அபிமான நடிகருக்கு எதிராக ரம்யா கூறிய கருத்துக்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் சோசியல் மீடியாவில் அவர் மீது ஆபாசமாக அவதூறு கருத்துக்களை கூறியதுடன் பலாத்காரம் செய்வோம், கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து நடிகை ரம்யா அளித்த புகாரின் பேரில் தர்ஷனின் ரசிகர்கள் 43 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதில் தற்போது தர்ஷினின் ரசிகர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .மேலும் இதில் தொடர்புடைய பலரை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!