
இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன்
சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் தர்ஷனா ராஜேந்திரனுடன் நடித்தது பற்றி கூறும்போது, “இயக்குனர் என்னிடம் இந்த கதையை சொன்னபோது இன்னொரு கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவர் தர்ஷனா ராஜேந்திரனின் பெயரை சொன்னார். ஆனால் என்னால் நம்ப முடியவில்லை. காரணம் இந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்பாரா, அதுவும் இல்லாமல் இது தெலுங்கில் முதல் படம்.. அதனால் சான்ஸே இல்லை என்று நினைத்தேன்.
ஆனாலும் தர்ஷனா இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும், அவரை தவிர வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்றும் எனக்குத் தோன்றியது. அவர் இந்த படத்தில் எப்படியாவது ஒப்பந்தமாகிவிட வேண்டும் என்பதற்காக பிளாக் மேஜிக், பூஜை, பிரார்த்தனை எல்லாம் செய்தேன். என் பிரார்த்தனையின் பலனாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்” என்று ஜாலியாக கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!