
210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம்
ஆனால் படத்தின் கரு, பக்தி பற்றி, நரசிம்மர், பிரகலாதன் பற்றி சொன்ன விஷயங்கள், அனிமேஷன் தரம், கிளைமாக்ஸ் மற்றும் இசை, திரைக்கதை போன்ற விஷயத்தால் இந்த படம் வெற்றி பெற ஆரம்பித்தது. 50, 100 கோடி என தொட்டு இப்போது 210 கோடியில் வந்து நிற்கிறது. இன்னும் பல கோடிகளை அள்ளும் என சொல்கிறார்கள்.
பல மொழிகளில் இந்த படம் வெளியானாலும் தெலுங்கு, இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் ஓரளவு வெற்றி. அடுத்து விஷ்ணுவின் பல அவதாரங்களை அனிமேஷனில் சொல்லப்போகிறோம். அடுத்து மகாவதார் பரசுராம் வரப்போகிறார். அவரை தொடர்ந்த மற்ற அவதாரங்கள் வரும் என்கிறார் இயக்குனர் அஸ்வின். இந்த படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே வெளியிட்டதால் கூடுதல் வரவேற்பு, பப்ளிசிட்டி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!