
இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ
கண்பார்வை பறி போன முன்னாள் போலீஸ் அதிகாரியாக ஹீரோ வருகிறார். அவர் எப்படி வில்லனை கண்டுபிடிக்கிறார் என்ற ரீதியில் கதை செல்கிறது. ராஜாவின் பார்வையிலே என்று தலைப்பு வைக்க நினைத்தோம். அது முடியாததால் இந்த தலைப்பு என்கிறார்கள்.
தெலுங்கில் பிரபல காமெடியன், இப்போது புஷ்பா வில்லன் புகழ் சுனிலுக்கு இதிலும் வில்லன். படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛நான் இந்த மாதிரி கேரக்டரில் நடித்தது இல்லை. ஏன் கேள்விப்பட்டதும் இல்லை. டப்பிங் பேசியபோது எனக்கே பயமாக இருந்தது. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன், 1000 படங்களுக்கு மேல் பார்த்துள்ளேன். ஆனால் இது மாதிரியான ஒரு கதை பார்த்ததே இல்லை. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்"" என்கிறார்.
மெஹ்ரீன் பிர்சாடா ஹீரோயினாக நடிக்கிறார், அஜித் மகளாக நடித்த அனிகாவுக்கு முக்கியமான வேடம். 1995ம் ஆண்டும் இந்திரா என்ற தலைப்பில் ஒரு படம் வந்தது. சுகாசினி இயக்க, அரவிந்த்சாமி, அனுஹாசன் நடித்து இருந்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!