
175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா!
அஸ்வின் குமார் இயக்கத்தில் ஜூலை 25ம் தேதி திரைக்கு வந்த அனிமேஷன் படம் "மகாஅவதார் நரசிம்மா". விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையக்கருவாகக் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் உருவான "கேஜிஎப், காந்தாரா" படங்களை தயாரிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படம் இதுவரை 175 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்நிறுவனம் ஒரு போஸ்டருடன் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதோடு இந்தியாவில் வெளியான அனிமேஷன் படங்களில் 100 கோடியை கடந்த முதல் படம் இதுவாகும். இந்த படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருவதால் 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!