முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம்
Advertisement
Advertisement
முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம்
ஆக 07, 2025
அ நிறம் | அளவு
Advertisement
சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த மதராஸி படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் கூலி வெளியானபின் மதராஸி பட புரமோஷன்களை ஆரம்பிக்க உள்ளனர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் இது முக்கியமான படம். காரணம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் பெரிய வெற்றி பெற்றது. ரூ.350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ஆகவே, இன்னொரு வெற்றிக்கொடுத்து அவர் தன்னை நிரூபிக்க ஆசைப்படுகிறார். முருகதாஸிற்கு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. ஹிந்தியில் சல்மான்கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படம் தோல்வி. மொத்தமே 160 கோடி வரை மட்டுமே வசூலித்ததாக தகவல். ஆகவே, அவரின் அடுத்த படம் அவர் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது. இரண்டுபேருமே மதராஸியை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். கஜினி, துப்பாக்கி கலந்த கலவை என மதராஸி பற்றி முருகதாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!