
மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு
அப்படி இருக்கையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டலாவை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை ஜாய் கிரிஸ்டலா வெளியிட்டு, தான் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார். ஜாய் கிரிஸ்டலாவிற்கும் இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே ‛பொன்மகள் வந்தாள்" பட இயக்குனர் பிரெட்ரிக்கை திருமணம் செய்து, அவரைவிட்டு பிரிந்தார்.
இதனிடையே ரங்கராஜ் - கிரிஸ்டலா திருமணத்தை வைத்து வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மனைவி, பிள்ளைகள் உள்ள சூழலில் இப்படி செய்யலாமா என ரங்கராஜையும், கிரிஸ்டலாவையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஜாய் கிரிஸ்டலாவை ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ‛‛சில பயணங்கள் அமைதியாக தொடங்கினாலும் நம்பிக்கையுடன் வளரும். நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவியாக (திரு மற்றும் திருமதி ரங்கராஜ்) எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். எங்கள் காதல் அன்பு, கண்ணியம், முழு மனதுடன் மற்றும் மரியாதையுடன் துவங்கியது. இந்தாண்டு நாங்கள் எங்கள் குழந்தையை வரவேற்க தயாராகி விட்டோம்"" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!