கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி
Advertisement
Advertisement
கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி
ஜூலை 30, 2025
அ நிறம் | அளவு
Advertisement
தமிழ் இசை அமைப்பாளர்கள் தனித்தனியாக பொது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேரடி இசை நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இசை அமைப்பாளர்கள் வித்யாசாகரும், விஜய் ஆண்டனியும் அடுத்தடுத்த நாட்களில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 20ம் தேதி வித்யாசாகரும், 21ம் தேதி விஜய் ஆண்டனியும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். தனித்தனி இசை நிகழ்ச்சி என்றாலும் நடத்தப்படும் இடம், நடத்தும் அமைப்பு ஒன்றுதான். இரு நிகழ்ச்சிகளிலும் முன்னணி பாடகர்கள், பாடகிகள் பாடுகிறார்கள், முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!