
கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல்
ஜூலை 25, 2025
Advertisement
‛ஆர்ஆர்ஆர்" படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ராஜமவுலி படம் இயக்கும் முறை குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் பிருத்விராஜ். அதில், ‛‛ஸ்கேல் என்பது ஒருபோதும் கதையாக இருக்க முடியாது. அது வெறும் கேன்வாஸ். இயக்குனர் ராஜமவுலி பெரிய பின்னணிகளை தேர்வு செய்கிறார். பெரிய காட்சி, ஸ்ட்ரோக்குகள் மூலம் ஒரு கதையைச் சொல்வதில் சிறப்பாக செயல்படுகிறார்.
பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை பிரமாண்டத்தையும் வலுவான உணர்வுப்பூர்வமான கதைகளையும் கலந்து படமாக்கி இருந்தார். குறிப்பாக கதை சொல்லும் ஆழத்தில் சமரசம் செய்யாமல் காட்சிகளை காட்சிப்படுத்தும் அவரது திறமை எல்லா காலத்திலும் அவரை ஒரு சிறந்த இயக்குனராகவே வைத்திருக்கும்"" என்று தெரிவித்துள்ளார்.
பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை பிரமாண்டத்தையும் வலுவான உணர்வுப்பூர்வமான கதைகளையும் கலந்து படமாக்கி இருந்தார். குறிப்பாக கதை சொல்லும் ஆழத்தில் சமரசம் செய்யாமல் காட்சிகளை காட்சிப்படுத்தும் அவரது திறமை எல்லா காலத்திலும் அவரை ஒரு சிறந்த இயக்குனராகவே வைத்திருக்கும்"" என்று தெரிவித்துள்ளார்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!