
ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம்
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் நடந்தது. தற்போது வேதாரண்யம் பகுதியில் நடந்து வருகிறது. வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி பகுதியில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் காரில் இருந்து தாவிப் பாயும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் மோகன்ராஜ் திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மோகன்ராஜை சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 52. இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!