
பிளாஷ்பேக் : 200 ரூபாய்க்கு டப்பிங் பேசிய சிவாஜி
இந்த படத்தின் நாயகனான முக்காமலா கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் தெரியாது. எனவே அவருக்கு டப்பிங் குரல் கொடுக்க முடிவு செய்தார் இயக்குனர் ரெட்டி. அப்போது அந்த படத்தில் நடித்த அஞ்சலி தேவி "எனக்கு தெரிந்து கணேசன் என்ற பையன் இருக்கிறான். மேடை நாடகங்களில் நன்றாக தமிழ் பேசுகிறான். அவனை அழைத்து பேச வையுங்கள்" என்றார். ரெட்டியும் சிவாஜியை அழைத்து பேசி அவருக்கு 500 ரூபாய் சம்பளம் பேசி டப்பிங் பேச வைத்தார்.
அன்றைக்கிருந்த நிலையில் சிவாஜிக்கு அந்த பணம் பெரியது என்பதால் டப்பிங் பேசினார். ஆனால் படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெறாததால் சிவாஜிக்கு முன்பணமாக கொடுத்த 200 ரூபாயோடு சரி. மீதி பணத்தை கொடுக்கவில்லை.
ஆக, சிவாஜியின் குரல்தான் முதலில் சினிமாவில் அறிமுகமானது. சினிமாவில் டப்பிங் கலைஞராகத்தான் சிவாஜி தன் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். சினிமாவிற்காக அவர் வாங்கிய முதல் சம்பளம் 200 ரூபாய்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!