
வேறு நடிகர்களே தெலுங்கில் இல்லையா? : காட்டி பட இயக்குனரிடம் விக்ரம் பிரபு கேட்ட கேள்வி
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று விக்ரம் பிரபு கூறும்போது, “இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை இயக்குனர் கிரிஷ் சந்தித்தபோது நான் அவரிடம் உண்மையாகவே தெலுங்கில் வேறு நடிகர்களே இல்லையா என்னை தேடி வந்து அழைப்பதற்கு என்ன காரணம். இந்த சந்தேகத்தை மட்டும் நீங்கள் நிவர்த்தி செய்துவிட்டால் நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இயக்குனர் கிரிஷ், சார் நான் உங்கள் ரசிகன் நீங்கள் நடித்த படங்கள் எல்லாவற்றையும் பார்த்து விடுவேன் என்று கூறி என்னுடைய படங்களில் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்துப் பேச ஆரம்பித்தார். அதன்பிறகு தான் அவர் இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியானவனாக இருப்பேன் என்று தான் என்னை தேடி வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!