
இளையராஜா பாணியை பின்பற்றும் கோவிந்த் வசந்தா
சினிமாவில் ஒவ்வொருவரும் ஒருவித சிறப்பு பாணியை கடைப்பிடிப்பார்கள். இளையராஜாவின் பின்னணி இசை பற்றி சொல்லவே வேண்டும். முக்கியமான அல்லது உணர்ச்சிபூர்வமாக சீன்களில் சில நிமிடம் அல்லது பல நொடிகள் இசையமைக்க மாட்டார் இளையராஜா. அந்த இடத்தை அமைதியாக விட்டு விடுவார். அந்த அமைதி அந்த சீனின் தாக்கத்தை அதிகரிக்கும்.
அந்தவகையில் குட் டே படத்தில் ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான சீனில் பின்னணி இசையை பயன்படுத்தாமல் அமைதியாக விட்டு இருக்கிறார் கோவிந்தவசந்தா. அந்த சீனும் உருக்கமாக வந்துள்ளதாம். இந்த படத்தில் இடம் பெற்ற, மகளை பிரிந்த அப்பாக்களுக்கு சமர்பணமாக பிரதீப் குமார் பாடிய மின்மினியே ராசத்தி பாடலும் , அப்பாக்களை பிரிந்த மகள்களுக்கு சமர்பணமாக சிறுமி ரைகைனா ரபீக் பாடிய அம்புலியே ஆரோரோ பாடலும் ஏற்கனவே வைரல் ஆகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!