
பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம்
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது. இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை. பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிக்பாக்கெட் பற்றி சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் சொல்லவில்லை. இந்த படம் அதுபற்றி விரிவாக பேசுகிறது. பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாபியா கும்பல் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம்" என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது. புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி படப்பிடிப்பினை துவங்கி வைத்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!