
பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க இருந்த ஜெயலலிதா
பாரதிராஜவை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏவிஎம் விரும்பியது. பல வருடங்களுக்கு பிறகு இது கைகூடியது. ஜெயலலிதாவிற்காக வைத்திருந்த கதையை "புதுமைப்பெண்" என்ற பெயரில் ஏவிஎம்மிற்காக இயக்கினார். இதில் ஜெயலலிதா நடிப்பதாக இருந்த கேரக்டரில் ரேவதி நடித்தார். முத்துராமன் நடிக்க இருந்த கேரக்டரில் பாண்டியன் நடித்தார்.
பொதுவாக ஏவிஎம் தயாரிக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் "ஏவிஎம்மின்" என்ற சொல் இடம்பெறும், பாரதிராஜா தான் இயக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் "பாரதிராஜாவின்" என்று குறிப்பிடுவார். இந்த படத்திற்கு யார் பெயரை போட்டுக் கொள்வது என்ற பிரச்னை வந்தபோது ஏவிஎம் படைப்பாளியை மதித்து "பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஏவிஎம்மின் புதுமைப்பெண்" என படத் தலைப்பை வெளியிட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!